Published : 26 Jul 2016 08:14 AM
Last Updated : 26 Jul 2016 08:14 AM
கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி வேலைநிறுத்த போ ராட்டம் நேற்று தொடங்கியுள்ளனர். இத னால், பெங்களூரில் இருந்து தமிழ் நாட்டுக்கு வரவேண்டிய கர்நாடக அரசுப் பேருந்துகளின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட் டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதால், தமிழகத்துக்குள் கர்நாடக அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. தமி ழகத்துக்குள் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் ஆங்காங்கே பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன குறிப்பாக கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு, கோலார், மைசூர், பல்லாரி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்து கள் நிறுத்தப்பட்டன. ஊழியர்களின் வேலை நிறுத்தப் போ ராட்டம் முடிவுக்கு வந்தால்தான் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்’’என்றனர்.
இது தொடர்பாக கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதால், தமிழகத்துக்குள் கர்நாடக அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. தமி ழகத்துக்குள் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் ஆங்காங்கே பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன குறிப்பாக கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு, கோலார், மைசூர், பல்லாரி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்து கள் நிறுத்தப்பட்டன. ஊழியர்களின் வேலை நிறுத்தப் போ ராட்டம் முடிவுக்கு வந்தால்தான் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்’’என்றனர்.
எந்த தடையும் இல்லை
இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது: ‘‘தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் கர்நாடகாவுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படு கின்றன. தமிழக அரசுப் பேருந்து களுக்கு எந்த தடையும் இல்லை. ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட் டால் பயணிகளின் பாதுகாப்பை கருதி தமிழக அரசுப் பேருந்துகளையும் நிறுத்துவோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT