Published : 26 Jun 2016 09:06 AM
Last Updated : 26 Jun 2016 09:06 AM
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
கே.வீ.தங்கபாலு:
இளங்கோவன் ராஜினாமா செய்தாரா, இல்லையா என்பதே அதிகாரப் பூர்வமாக தெரி யாத நிலையில் எதுவும் சொல்ல விரும்பவில்லை. மேலிடம் முடிவுக்கு கட்டுப்படுவேன்.
கே.எஸ்.அழகிரி:
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று இளங் கோவன் ராஜினாமா செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி பார்த்தேன். இது நல்ல நடவடிக்கையாகும். தமிழக காங்கிரஸை தூக்கி நிறுத்த வேண்டுமானால் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை மாநிலத் தலைவராக்க வேண்டும். கட்சி மேலிடம் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.
டி.யசோதா:
எந்தத் தலை வருக்கும் இல்லாத சுதந்திரத்தை இளங்கோவனுக்கு ராகுல் காந்தி கொடுத்தார். அதை அவர் தவறாகப் பயன்படுத்தி விட்டார். திட்டமிட்ட ரீதியில் தேர்தல் பணிகள், பிரச்சாரம் செய்யாததால்தான் காங்கிரஸ் தோற்றது. எனவே, இளங்கோவன் பதவி விலகியது நல்ல முடிவு. அதை வரவேற்கிறேன்.
ஆ.கோபண்ணா:
ஜி.கே.வாசன் வெளியேறி தமாகாவை தொடங்கிய பிறகு தத்தளித்துக் கொண்டிருந்த காங்கிரஸை தூக்கி நிறுத்தியவர் இளங்கோவன். பணம் மட்டுமே பிரதானமாக இருந்த இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களை பிடித்து 3-வது கட்சியாக உருவெடுத்துள்ளதே சாதனைதான். எனவே, தேர்தல் தோல்விக்கு இளங் கோவனை குறை கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT