Published : 06 Apr 2017 07:38 PM
Last Updated : 06 Apr 2017 07:38 PM

தமிழகத்தின் 7 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

தமிழகத்தில் வியாழக்கிழமை 7 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமையும் 7 நகரங்களில் வெயில் சதம் அடித்திருந்தது. அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியிருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுககும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி வேலூரில் 107.24 டிகிரி ஃபாரன்ஹீட் (41.8 டிகிரி சென்டிகிரேட்), வேலூரில் 105.08 டிகிரி, திருச்சியில் 104.18 டிகிரி, தருமபுரியில் 103.46 டிகிரி, மதுரை மற்றும் சேலத்தில் 103.28 டிகிரி, பாளையங்கோட்டையில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய ஒருவர் அதிகாரி கூறும்போது, ''தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பகுதியளவு மேகமூட்டதுடன் காணப்படும்'' என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x