Published : 28 Feb 2017 09:08 AM
Last Updated : 28 Feb 2017 09:08 AM
சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் 7-வது தெருவில் வசிப்பவர் பாண்டியன். இவரது மகன்கள் மணிகண்டன்(27), ஜனார்த்தனன்(24). இவர்களின் உறவினர் சீனிவாசன்(50) கொருக்குப்பேட்டை பாரதி நகர் 2-வது தெருவில் வசிக்கிறார்.
பெரியம்மா சுசீலா, செங்கல்பட்டில் வசிக்கிறார். சீனிவாசனின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இதற்காக சுசீலாவிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், ஜனார்த்தனனிடம் இருந்து ரூ.50 ஆயிரமும் சீனிவாசன் கடனாக வாங்கியதாக தெரிகி றது. சுசீலாவும், ஜனார்த்தன னும் பல நாட்களாக பணத்தை திருப்பிக் கேட்ட நிலையில் சீனிவாசன் பணம் கொடுக்கா மல் ஏமாற்றி வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் சுசீலா, ஜனார்த்தனன், மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சீனி வாசனின் வீட்டுக்கு சென்று, பணத்தை திருப்பிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சீனிவாசன் கத்தியால் ஜனார்த்தனனை சரமாரியாக குத்தினார். இதைத் தடுக்க சென்ற மணிகண்டனுக்கும் கத்திக்குத்து விழுந்தது.
அருகே இருந்தவர்கள் சீனிவாசனை பிடித்தனர். ஜனார்த்தனனையும், மணிகண்டனையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஜனார்த்தனன் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சீனிவாசனை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT