செல்போனில் பேசியபடி நடந்து சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

செல்போனில் பேசியபடி நடந்து சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பலி
Updated on
1 min read

அவிநாசி வட்டம் பெருமாநல்லூர் அருகே காளிபாளையம்புதூர் ஆசாரிதோட்டத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (32). இவர், கடந்த 3-ம் தேதி வீட்டின் அருகே அலைபேசியில் பேசியபடி நடந்துசென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

பலத்த காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிப்பதாக பெருமாநல்லூர் போலீஸார் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in