Published : 28 Sep 2016 08:58 AM
Last Updated : 28 Sep 2016 08:58 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணனை தமிழக காங்கிரஸ் தலை வர் சு.திருநாவுக்கரசர் நேற்று சந்தித்துப் பேசினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மார்க் சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அ.சவுந் தரராஜன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. எஸ்.விஜயதரணி, மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக கடந்த 14-ம் தேதி திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். 18-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைமை அலு வலகமான சத்தியமூர்த்தி பவனில் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு திமுக தலைவர் கருணாநிதி, பொரு ளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், நடிகர் ரஜினிகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் உள் ளிட்டோரை சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜி.ராம கிருஷ்ணனை நேற்று சந்தித்தார்.
இது தொடர்பாக திருநாவுக் கரசரிடம் கேட்டபோது, தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன். அதுபோலவே இன்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT