Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

26-ல் கொடநாடு செல்கிறார் ஜெ.

அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 26-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

எம்.ஜி.ஆர். நினை விடத்துக்கு காலை 10.30 மணிக்கு ஜெயலலிதா சென்று மலரஞ்சலி செலுத்துகிறார். பின்னர் உறுதியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து வரும் 26-ம் தேதி ஜெயலலிதா கொடநாடு செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x