Published : 16 Jul 2016 07:59 AM
Last Updated : 16 Jul 2016 07:59 AM
சிலை கடத்தல் வழக்கில் தற்போது புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ள தீனதயாள், ஜாமீனில் விடக்கோரி எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் எண் 10-வது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று குற்றவியல் நடுவர் (பொறுப்பு) மகேஸ்வரி பானு ரேகா முன்பு நடந்தது.
வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் உள்ளதால், தீனதயாளனே வாதிட்டார். அரசு உதவி குற்றவியல் வழக்கறி ஞர் ஆர்.காயத்ரி, “இது முக்கியமான கடத்தல் வழக்கு. விசாரணை இன்னும் முழுமை அடையவில்லை. இந்த சூழலில் இவருக்கு ஜாமீன் தரக்கூடாது’’ என்றார். அதையடுத்து அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT