Published : 24 Nov 2014 09:56 AM
Last Updated : 24 Nov 2014 09:56 AM

உணவு பொருட்களை கடத்தியதாக இதுவரை 5,968 பேர் கைது

உணவு பொருட்களை கடத்தியதாக இந்த ஆண்டு இதுவரை 5,968 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 12,77,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு ரேஷனில் வழங்கும் இலவச அரிசியை ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பெத்துராஜ் என்பவர் முறைகேடாக வாங்கி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வந்தார். இவர் மீது தமிழகம் முழுவதும் 10 வழக்குகள் உள்ளன. இவரை தமிழக போலீஸார் தேடிவந்த நிலையில் ஆந்திர சிறையில் இவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை நீதிமன்றம் மூலம் வேலூர் சிறைக்கு மாற்றியுள்ளார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் ராதாகிருஷ்ணன்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 12,77,300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். அரிசியை கடத்த பயன்படுத்தியதாக 1,299 வாகனங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. ரேஷன் அரிசி உட்பட உணவுப் பொருட்களை கடத்தியதாக இந்த ஆண்டு 5,968 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 105 பேர் கள்ளச் சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x