Published : 31 Oct 2013 02:46 PM
Last Updated : 31 Oct 2013 02:46 PM

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 39 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 4- ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், கடந்த 14- ஆம் தேதியன்று காரைக்காலைச் சேர்ந்த 35 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரின் காவல் வரும் நவம்பர் 13-ந்தேதி வரையும், காரைக்கால் நீதிமன்றத்தின் காவல் நவம்பர் 14-ந்தேதி வரையும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x