Published : 11 Mar 2017 09:14 AM
Last Updated : 11 Mar 2017 09:14 AM
மத்திய அரசு பணிக்கு செல்ல 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சில ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பது வழக்கம். மத்திய அரசு அனுமதி அளித்த உடன் தமிழக அரசு அவர்களை விடுவித்து உத்தரவு பிறப்பிக்கும். அதன்படி மத்திய அரசு பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்த 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
யார் யார்?
அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி ஜி.வெங்கட ரமணன், திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர், காவலர் நலன் ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், மதுரை டிஐஜி ஆனந்தகுமார் சோமானி, விழுப்புரம் எஸ்பி நரேந்திரன் நாயர், ரயில்வே எஸ்பி விஜயகுமார், அரியலூர் எஸ்பி அனில்குமார் கிரி, திண்டுக்கல் எஸ்பி சரவணன், மதுரை எஸ்பி விஜயேந்திர பிதாரி ஆகிய 9 ஐபிஎஸ் அதிகாரி களுக்கு மத்திய அரசு பணிக்கு செல்ல தமிழக உள்துறை செய லாளர் நிரஞ்சன் மார்டி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி கிடைத்தவுடன் இந்த 9 ஐபிஎஸ் அதிகாரிகளும் உட னடியாக தமிழக அரசு பணியி லிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT