Published : 06 Apr 2017 09:27 PM
Last Updated : 06 Apr 2017 09:27 PM

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்யும் தினகரனை கைது செய்ய வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்யும் தினகரனை கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்.

ஆர்.கே.நகரில் 100 பேர் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை காவல் துறை விசாரித்ததில், 100 பேரும் டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்யும் தினகரனை கைது செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் நிற்க தகுதியற்றவர் எனக் கூறி அவரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x