Published : 23 Dec 2013 01:39 PM
Last Updated : 23 Dec 2013 01:39 PM

வங்கித் துறை வளர்ச்சி ஐ.மு.கூட்டணியின் சாதனை. ப.சிதம்பரம்

கடந்த 10 ஆண்டுகளில் வங்கித் துறையின் அபரிமித வளர்ச்சி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப் பெரிய சாதனை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். மேலும், வங்கித் துறையின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்ட்ரல் வங்கி நிறுவப்பட்ட 103-வது ஆண்டு விழாவை ஒட்டி மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப.சிதம்பரம், வங்கிக் கிளைகளை பரவலாக பல்வேறு இடங்களில் தொடங்கியது மட்டுமல்லாமல் வங்கிச் சேவையின் தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும், முன்பு மாதிரி இல்லாமக் ஏடிஎம் மையங்கள் நிறைய திறக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் கல்விக் கடன் என்பது பல மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்போதைய கால கட்டத்தில் லட்சக் கணக்கான மாணவர்கள் கல்விக் கடன் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

வங்கித் துறை வளர்ச்சியின் மற்றொரு விளைவு அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பது என பெருமிதம் தெரிவித்தார். 10 வங்கிகள் துவங்கப்பட்டால், 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதாகவும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x