Published : 22 Apr 2017 03:54 PM
Last Updated : 22 Apr 2017 03:54 PM
புதிய கூட்டணியை உருவாக்கவே முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்றும், இதில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என்றும் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், ''விவசாயிகளின் பிரச்சனைக்காக என கூறிக்கொண்டு தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் ஏப்ரல் 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு எந்த வகையிலும் தீர்வு கிடைக்காது. சுமார் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான வணிகம் பாதிக்கப்படும்.
மேலும் இந்தப் போராட்டம் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணியை உருவாக்கும் அரசியல் லாபத்திற்காக நடத்தப்படுகிறது. எனவே அவர்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது'' என்று கிருஷ்ணசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT