Published : 08 Jun 2016 09:05 AM
Last Updated : 08 Jun 2016 09:05 AM

சாதனை மாணவர்கள் விருது பெற பாரதி யுவகேந்திரா அழைப்பு

பாரதி யுவகேந்திரா அமைப்பால் வழங்கப்படும் யுவ கலாபாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருதுகளுக்காக தகுதியான மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் அரிமா நெல்லை பாலு விடுத்துள்ள அறிக்கை: படிப்பு மற்றும் பாட்டு, நடனம், கவிதை, பேச்சு உள்ளிட்ட இதர தனித் திறமைகளில் சிறந்து விளங்கும் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு யுவ கலாபாரதி விருதும், கல்லூரி மாணவ - மாணவியருக்கு சுவாமி விவே கானந்தர் விருதும் பாரதி யுவகேந்திராவின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

விருதுக்குத் தகுதியான மாணவர்கள் தங்களது சாதனை குறித்த சான்றிதழ்களுடன் ’பாரதி யுவ கேந்திரா, எஃப் 171, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை 625 016’ என்ற முகவரிக்கு இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x