Published : 20 Oct 2013 03:07 PM
Last Updated : 20 Oct 2013 03:07 PM

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் 4 மீனவர்கள் காயம்

இலங்கை கடற்படையினர் தாக்கியதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 4 பேர் காயமடைந்தனர். 10 மீன்பிடி வலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு, வலைகளையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 4 மீனவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மீனவர்களை அதிகாரிகள் விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சமீப காலமாகவே, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் மிகுதியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x