Published : 29 Jun 2016 09:48 AM
Last Updated : 29 Jun 2016 09:48 AM

தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 16 பேருக்கு கண் சிகிச்சை நடந்தது. இதில், எட்டு பேருக்கு கண்பார்வை கடுமையாக பாதிக்கப் பட்டுள் ளது. மற்றவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தவறான மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை காரணமாக இருக்க லாம் என கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன் வந்து, இந்த விவகாரத்தை வழக்காக எடுத்துள்ளது.

இந்தவிவகாரத்தில், தமிழக தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான உண்மை நிலை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மனித உரிமை மீறல் உள்ளதா என்பதை ஆய்வு செய்து 2 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x