Published : 08 Jul 2016 05:54 PM
Last Updated : 08 Jul 2016 05:54 PM

தேமுதிக கரூர் மாவட்ட அவைத்தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்: விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக கரூர் மாவட்ட அவைத்தலைவர் உட்பட மேலும் சில நிர்வாகிகளை நீக்குவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''தேமுதிக கரூர் மாவட்ட அவைத்தலைவர் பஞ்சப்பட்டி.கே.பாலன் கட்சியிலிருந்தும் அவர் வகித்த பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் தேமுதிகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

கரூர் மாவட்ட துணை செயலாளர்கள் மகாசங்கர், எம்.ஆர்.கே.செல்வகுமார் ஆகியோர் அவரவர் வகித்து வந்த கழகப் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x