Published : 11 Jul 2016 10:23 AM
Last Updated : 11 Jul 2016 10:23 AM

மேட்டூரில் கண் அறுவை சிகிச்சையின்போது பார்வை இழந்தோருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு : விஜயகாந்த் கோரிக்கை

சேலம் மாவட்டம் மேட்டூரில் கண் அறுவை சிகிச்சையின்போது பார்வை இழந்த 18 பேருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் 23 முதியோர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்தபோது, அவர்களில் 18 பேர் கண் பார்வை இழந்துள்ளனர். பிறகு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித் தபோது, அரசு மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் கண்களில் தொற்று ஏற்பட்டு பார்வை இழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இனி அவர்களுக்கு கண் பார்வை வராது என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, கண் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் சுபா, ராஜேந்திரன் மற்றும் செவிலியர் கவுசல்யா ஆகியோர் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர் களை இடமாற்றம் செய்ததால் மட்டும் கண் பார்வை இழந்த முதியோர்களுக்கு பார்வை கிடைத்துவிடுமா?.

இந்த நிகழ்வு உண்மையில் மிகவும் வேதனைக்குரியது. கூலி வேலை செய்து பிழைக்கும் இந்த முதியவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க இந்த அரசு முற்பட வேண்டும். அரசுப் பணி யாளர்களுக்கு கூடுதல் பயன் களுடன் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ள இந்த அரசு, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள 60 வயது கடந்த முதியவர்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்களை விரிவாக செயல்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.

ஏற்கெனவே வறுமையில் வாடும் ஏழை, முதியவர்கள் கண் பார்வை பரிசோதிக்க சென்ற இடத்தில் பார்வையை இழந்தது, உரலுக்கு ஒரு புறம் இடி மத்தளத்துக்கு இருபு றமும் இடி என்பது போல் உள்ளது. இதை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x