Published : 09 Jun 2016 08:15 AM
Last Updated : 09 Jun 2016 08:15 AM

குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி குரூப்-2ஏ (நேர்முகத்தேர்வு அல்லாத பணிகள்) எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர்.

இந்த நிலையில், குரூப்-2ஏ எழுத்துத் தேர்வு முடிவு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று மாலை வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு தங்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப்-2ஏ தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்-2ஏ பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 4-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x