Published : 13 Mar 2017 08:17 AM
Last Updated : 13 Mar 2017 08:17 AM
சின்னக்குத்தூசி நினைவு அறக் கட்டளை விருதுக்கு கட்டுரை கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி நினைவு அறக் கட்டளையின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கட்டுரை களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 1, 2016 முதல் டிசம்பர் 31, 2016 வரை நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் இணைய தளங்களில் வெளியான அரசி யல், பொருளாதாரம், சமூகம்-பண்பாடு தொடர்பான கட்டுரை களுக்கு பரிசுகள் வழங்கப் படும்.
ரொக்கப் பரிசு
கட்டுரையாளர் மட்டுமின்றி, கட்டுரைகளைப் படித்த வாசகர் களும் அவற்றைப் பரிந்துரை செய்து விருதுக்கு அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப் படும் 3 கட்டுரைகளின் ஆசிரியர் களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசளிக்கப்படும்.
வரும் ஜூன் 15-ம் தேதி சென்னையில் நடைபெறும் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பிறந்தநாள் விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்குப் பரி சளிக்கப்படும். கட்டுரைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் கீழ்க் காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
வரும் ஜூன் 15-ம் தேதி சென்னையில் நடைபெறும் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பிறந்தநாள் விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்குப் பரி சளிக்கப்படும். கட்டுரைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் கீழ்க் காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை, 13, வல்லப அக்ர ஹாரம் தெரு, அறை எண்-6, திருவல்லிக்கேணி, சென்னை- 600005. மின்னஞ்சல் chinnakuthusi trust@gmail.com. மேற்கண்ட தகவலை சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT