8% வளர்ச்சியை எட்டுவதே முதல் இலக்கு: பிரணாப்

8% வளர்ச்சியை எட்டுவதே முதல் இலக்கு: பிரணாப்
Updated on
1 min read

8 சதவீத பொருளாதார வளர்ச்சியை மீண்டும் அடைவதே முதல் இலக்காக கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

28-வது இந்திய பொறியாளர்கள் மாநாட்டினை சென்னையில் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்துப் பேசிய போது இதனை தெரிவித்தார்.

மேலும், நாட்டின் வளர்ச்சி விகிதம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்து வருகிறது என்றும் வருத்தம் தெரிவித்தார். சர்வதேச நிதி நெருக்கடியை சவாலாக எதிர்கொண்டு, பல வருடங்களாக தக்கவைத்திருந்த 8% வளர்ச்சியை அடைய முற்பட வேண்டும் என்றார். இந்தியா இந்த இலக்கினை அடையும் என தான் முழுமையாக நம்புவதாகவும் கூறினார்.

பொறியாளர்களும், விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in