

ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மாயமான ராணுவ விமா னத்தின் உடைந்த பாகங்களா என் பது குறித்து முடிவு செய்ய 25 இடங் களில் மறு ஆய்வு தொடங்கியுள்ளது.
சென்னை தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்து அந்தமா னுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் 29 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமா னம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட் டன. ஆனால் எதிலுமே நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடலின் மேற் பரப்பில் விமானத்தை தேடும் பணி கடந்த 2-ம் தேதியுடன் நிறுத்தப் பட்டது.
தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான ‘சாகர் நிதி’, மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்ர ரத்னாகர்’ ஆகிய இரு ஆராய்ச்சிக் கப்பல்கள், ‘நிருபக்’ என்ற கடற் படை கப்பல், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 4 கப்பல்கள் மாயமான விமா னத்தை ஆழ்கடலில் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. கப்பல்கள் நடத்திய தேடுதலில், கடலுக்கு அடி யில் சந்தேகப்படும் விதத்தில் 54 பொருட்களை கண்டுபிடித்தன. இவற்றில் 29 பொருட்கள் விமானத் தின் பாகங்கள் இல்லை என்பது ஆராய்ச்சி மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
மீதமுள்ள 25 பொருட்கள் மாய மான விமானத்தின் பாகங்களா என் பதை உறுதி செய்ய, அந்த இடங் களில் மறு ஆய்வு நடத்தப்பட்டு வரு கிறது. மத்திய புவியியல் ஆராய்ச் சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்ர ரத்னாகர்’ கப்பல் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் இந்த பணி நடைபெறும்.