Published : 17 Feb 2017 04:27 PM
Last Updated : 17 Feb 2017 04:27 PM
தமிழக முதல்வராக பதவியேற்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி வியாழனன்று பதவியேற்றதற்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், "நான் தமிழக முதல்வராக பதவியேற்றதற்கு, நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் வணங்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தமிழக முன்னேற்றதுக்கு பாடுபடுவேன். அதற்காக உங்களது ஒத்துழைப்பையும், ஆதரவையும் எதிர்நோக்கி உள்ளேன்" என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT