டிடிவி தினகரன் வெளிநாடு செல்ல தடை: தேடப்படும் நபராக அறிவித்து விமான நிலையங்களுக்கு டெல்லி போலீஸ் கடிதம்

டிடிவி தினகரன் வெளிநாடு செல்ல தடை: தேடப்படும் நபராக அறிவித்து விமான நிலையங்களுக்கு டெல்லி போலீஸ் கடிதம்
Updated on
1 min read

டிடிவி தினகரன் வெளிநாடு தப்பிச்சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் துறைமுகங்களுக்கும் டெல்லி போலீஸார் கடிதம் அனுப்பி யுள்ளனர்.

அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற் காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தாகவும் இதற்காக இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப் படுகிறது. இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்திய டெல்லி போலீஸார், அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர்.

முன்பணமாக கொடுக்கப் பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சத்தை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய் துள்ளனர். அவரது 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய் தனர்.

3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சுகேஷ் கொடுத்த வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தினகரன் வெளிநாட்டு குடியுரிமை பெற்று இருப்பவர் என்பதால் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடும் என்ற சந்தேகம் டெல்லி போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

டெல்லி போலீஸ் அறிவிப்பு

இதனால் டெல்லி போலீ ஸார் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று டிடிவி தினகரனை தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை போலீ ஸார் டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறை முகங்களுக்கு தினகரன் பற்றிய தகவல்களையும் நீதி மன்ற ஆணையையும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் அனுப்பி உள்ளனர். விமானம் அல்லது கப்பல் மூலம் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத் துள்ளனர். போலீஸாரின் நடவடிக்கைகளால் தினகரன் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை வருகை

தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற் காக அவர்கள் நேற்று மாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து விமா னத்தில் புறப்பட்டனர். இரவு 9 மணியளவில் அவர்கள் சென்னை வந்தனர். இன்று தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளனர். தினகரனுட னான தொடர்பு, அவர் கொடுத்த பணம் குறித்து டெல்லி போலீஸாரிடம் சுகேஷ் வாக்குமூலம் கொடுத் துள்ளார். அதை வைத்து தினகரனிடம் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in