Published : 24 Dec 2013 12:00 PM
Last Updated : 24 Dec 2013 12:00 PM

நாகை மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாகை மீனவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று (செவ்வாய் கிழமை) வாபஸ் பெறப்பட்டது. முதல்வர் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த டிச. 11-ல் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 110 மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 30 பேர் என 140 பேரை இலங்கை கடற்படையினர் ஒரே நேரத்தில் சிறைப்பிடித்தனர்.

இதனால் டிசம்பர் 12 முதல் நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி (டிசம்பர் 21-ஆம் தேதி) சனிக்கிழமை நாகப்பட்டினத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதல்வர் ஜெயலலிதாவை நாகை மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார்.

இதனையடுத்து, முதல்வர் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நாகை மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x