Published : 04 Jun 2016 07:35 AM
Last Updated : 04 Jun 2016 07:35 AM
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்தில் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு சில தினங்களில் தொடங்க உள்ளது. இதனால் தமிழகம் நோக்கி குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும். தமிழத்தில் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும். கோவை, ஈரோடு, தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT