Published : 13 Sep 2016 08:07 AM
Last Updated : 13 Sep 2016 08:07 AM

சாலை விபத்தில் பொறியியல் மாணவர் பலி

வேலூர் மாவட்டம் காட்பாடி கோபாலபுரம் விரிவு கோவிந்த ராஜன் தெருவைச் சேர்ந்தவர் அஜீத் குமார்(20). கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் திலீபன்(20). கடலூர் திருவந்திபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் தேவநாதன்(19).

இவர்களில் அஜீத், ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக் கானிக்கலும், மற்ற இருவரும் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவி லும் படித்து வருகின்றனர். 3 பேரும் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தாம்பரத்தில் இருந்து, மேடவாக்கத்துக்கு ஒரே பைக்கில் சென்றனர். வேளச்சேரி சாலை சந்தோஷபுரம் என்ற இடத்தை கடந்த போது எதிர்பாராதவிதமாக பைக் சாலை தடுப்பில் மோதியது.

இதில், தேவநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

குடிபோதையில் விழுந்தவர் பலி

குரோம்பேட்டை நெமிலிச்சேரி நாகப்பா தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(32). கார் ஓட்டுநரான இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 2-வது மாடிக்கு சென்ற செந்தில் வெகு நேரமாகியும் கீழே வராததால், மனைவி தேடிச் சென்றார். அப்போது செந்தில், மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சிட்லபாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x