Published : 11 Apr 2014 12:36 PM
Last Updated : 11 Apr 2014 12:36 PM

ஊராட்சி செயலர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது: ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தலைமை வகித்துப் பேசியதாவது:

தேர்தலின்போது தகவல் தொடர்பு மிக முக்கியம். அதனால், அனைத்து அலுவலர்களும் தங்களின் செல்போன்களை சார்ஜ் செய்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் தேர்தல் பணியை பாதிக்கும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி வரும்போது எதற்காகவும் வாகனத்தை நடுவழியில் நிறுத்தக்கூடாது. வாகனத்தில் போதுமான அளவு டீசல் நிரப்பப் பட்டிருக்க வேண்டும். மேலும் கிராம உதவியாளர்கள், ஊராட்சி மன்றச் செயலர்கள் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப் படுவார்கள் என்றார் அவர். தேர்தல் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரநாத் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x