Published : 11 Jul 2016 10:27 AM
Last Updated : 11 Jul 2016 10:27 AM

ரயில் மோதி 3 மாடுகள் பலி

திருவாரூர் அருகே நேற்று ரயில் மோதியதில் 3 கறவை மாடுகள் உயிரிழந்தன. மேலும், 2 மாடுகள் உயிருக்குப் போராடுகின்றன.

திருவாரூர் அருகேயுள்ள மேட்டுப்பாளை யத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்குச் சொந்தமான 5 கறவை மாடுகள், அலிவலம் சாலை ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தன. மாலை 4.30 மணியளவில் காரைக்காலிலிருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், அந்த மாடுகள் மீது மோதியது. இதில் 3 மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இரு மாடுகள் பலத்த காயமடைந்தன.

தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள், காயமடைந்த 2 மாடு களை, கால்நடை மருத்துமனைக்கு எடுத்துச்சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x