Published : 27 Mar 2017 08:58 AM
Last Updated : 27 Mar 2017 08:58 AM
குடும்பத்தோடு வேளாங்கன்னி சென்றி ருந்த ஐ.டி ஊழியரின் வீடு புகுந்து 90 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
மாதவரம் கே.கே.ஆர். கார்டன் பகுதி யில் வசித்து வருபவர் அந்தோணி பிரதீப் ராஜ் (31). அடையாரில் உள்ள ஐ.டி நிறுவ னம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் அந்தோணி பிரதீப் ராஜின் தந்தை சுரேஷ், தாய் சாந்தி ஆகியோரும் வசித்து வருகின் றனர். சில தினங்களுக்கு முன்பு அந் தோணி பிரதீப் ராஜ் மகளுக்கு மொட்டை போட வேளாங்கன்னிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 90 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தோணி பிரதீப் ராஜ், இதுகுறித்து மாதவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். குற்றப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகிய கொள்ளையர்களின் ரேகைகளைச் சேகரித்து சென்றனர். முதல் கட்டமாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT