Published : 29 Jul 2016 09:03 AM
Last Updated : 29 Jul 2016 09:03 AM
பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழு பரிந்துரை களின்படி வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருப்பதால் பத்திரப் பதிவே நடப்பதில்லை. எனவே, இதை குறைக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘பத்திரப் பதிவுக் கான வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஜெயல லிதாவிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை ஏற்று பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழு பரிந்துரைகளின்படி வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT