

இந்திய தொலைத் தொடர்புத் துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு பொறியாளர்கள் முதல் கனரக வாகன ஓட்டுநர்கள் வரை விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்திய தொலைத் தொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணிகளுக்கு 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 30 வயதிற்குட்பட்ட பிஇ/பிடெக் தேர்ச்சி பெற்ற கட்டிடப் பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். மாத ஊதியம் ரூ. 56 ஆயிரம்.
பிளஸ் 2 அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்ற பைபர் ஸ்பைலைசர்கள் தேவை. மாத ஊதியம் ரூ. 28 ஆயிரத்து 800.
10-ம் வகுப்பு தேர்ச்சி, குவைத் நாட்டின் ஓட்டுநர் உரிமத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள் தேவை. மாத ஊதியம் ரூ. 19 ஆயிரத்து 500. இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களுக்கு மாத ஊதியம் ரூ. 16 ஆயிரத்து 750 வழங்கப்படும்.
10-ம் வகுப்பு வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் தொலைத் தொடர்புத் துறையில் அனுபவம் பெற்ற லேபர்கள் தேவை. மாத ஊதியம் ரூ. 15 ஆயிரத்து 600.
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகள் பணி ஒப்பந்த அடிப்படையில் தகுதி மற்றம் அனுபவத்துக்கு ஏற்ப்ட ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், உணவுப்படி, இலவச மருத்துவம், மருத்துவக் காப்பீடு, மிகைநேரப் பணி ஊதியம் வழங்கப்படும். குவைத் நாட்டின் சட்டப்படி இதர சலுகைகளும் கிடைக்கும்.
30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு omcresum@gmail.com என்ற இமெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு: >www.omcmanpower.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.