Published : 28 Apr 2017 08:23 AM
Last Updated : 28 Apr 2017 08:23 AM

சென்னை அடையாறில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று டிடிவி தினகரன், மனைவியிடம் டெல்லி போலீஸ் தீவிர விசாரணை: தமிழக போலீஸ் அதிகாரிகளும் சிக்குகின்றனர்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனை சென்னைக்கு அழைத்து வந்த டெல்லி போலீஸார், அவரை அடை யாறில் உள்ள வீட்டில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். வீடு முழுவதும் சோதனை நடத்தி யதுடன் தினகரனின் மனைவி அனுராதா மற்றும் வீட்டு பணியாளர் களிடமும் விசாரணை நடத்தினர்.

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். டெல்லியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த 16-ம் தேதி இரவு கைது செய்தனர். அவருக்கு முன்பணமாக ரூ.10 கோடி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. சுகேஷிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய், 2 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சுகேஷ் கொடுத்த வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து டிடிவி தினகரனுக்கு சம்மன் கொடுத்து டெல்லிக்கு வரழைத்தனர். கடந்த 22-ம் தேதி டெல்லி சாணக்யபுரி போலீஸில் தினகரன் ஆஜரானார். அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்திய போலீஸார், 25-ம் தேதி நள்ளிரவில் கைது செய்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரையும் 26-ம் தேதி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீஸார், அவர்களை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அதை ஏற்று இருவரையும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அத்துடன் தினகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மேலும், இருவரையும் சென்னை, பெங்களூரு, கொச்சி ஆகிய இடங் களுக்கு அழைத்துச் சென்று விசாரிக் கவும் போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷையும் சென்னை, பெங்களூரு, கொச்சிக்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை நடத்தியது குறிப்பிடத் தக்கது.

சென்னையில் விசாரணை

இந்நிலையில் தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் டெல்லி போலீஸார் நேற்று விமானத்தில் சென்னை அழைத்து வந்தனர். டெல்லி குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் சஞ்சய் ஷெகாவத் தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸார் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். மதியம் 1.25 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள், அங்கு தயாராக இருந்த 2 கார்களில் ஏறி பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனுக்கு சென்றனர். அங்கு 2 அறைகள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

பின்னர், மாலை 4 மணி அளவில் இருவரையும் அடையாறில் உள்ள தினகரனின் வீட்டுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து இருவரிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் வீடு முழுவதும் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் சில ஆவணங் களை கைப்பற்றியதாக தெரிகிறது. அத்துடன் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா மற்றும் வீட்டு பணியாளர்களிடமும் போலீ ஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, மல்லிகார்ஜு னாவை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற போலீஸார், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திவிட்டு, மீண்டும் தினகரன் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இடைத்தரகர் சுகேஷிடமும், லஞ்சம் கொடுப்பதற்கான பணப் பரிமாற்றம் குறித்து பலரிடமும் தினகரனே செல்போனில் பேசிய தாகவும் இதற்காக தனது நண்பர் மல்லிகார்ஜுனா செல்போன் உட்பட 5 செல்போன்களை தினகரன் பயன்படுத்தியதாகவும் கூறப்படு கிறது. அந்த 5 செல்போன்களை தேடித்தான் தினகரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப் படுகிறது.

லஞ்ச வழக்கில் இருந்து தினகரனை காப்பாற்ற தமிழகத் தைச் சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்துள் ளனர். அவர்களும் இந்த வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ், அனைத்து தகவல்களையும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரங்களை எடுப்பதற்காகவே தற்போது டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீதி பணம் எங்கே?

சென்னையில் விசாரணை முடிந்ததும் தினகரன், மல்லி கார்ஜுனா இருவரையும் கொச்சி, பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர். ரூ.10 கோடி பணம் கொச்சி, பெங்களூரு வழியாகத்தான் டெல் லிக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளது. முன் பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ரூ.1 கோடியே 30 லட்சம் மட்டுமே டெல்லி போலீஸாரிடம் சிக்கியுள்ளது. மீதமுள்ள பணம் எங்கிருக்கிறது என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x