Published : 07 Jul 2016 12:20 PM
Last Updated : 07 Jul 2016 12:20 PM
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை நகர திமுக பொறுப்பாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் செயலாளர் உட்பட 19 பேர் கைது செய்யப் பட்டனர்.
பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் தங்க.மனோகரன், கடந்த 3-ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட் டார். கட்சிக்குள் நிலவிய அதிகாரப் போட்டி காரணமாக இக்கொலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, திமுக நகர முன்னாள் செயலாளர் சீனி.அண்ணாதுரை (60), சதாம் உசேன்(20), அட்சயகுமார்(18), அருண்(19), அரவிந்த்(20), மணி கண்டன்(19), அருண்குமார்(19), சரவணன்(22), கார்த்திகேயன்(19), கலியமூர்த்தி(19), வடிவழகன் (25), விஜய்(19) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும், கூலிப்படைத் தலைவராகக் கருதப்படும் விக்ரம் மற்றும் வினிஷ், ஆசாரி ராஜேஷ், பழம் (எ) பாரதி, சுரேந்திரன், தட்டு பழனி, பாண்டா கார்த்திக் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சீனி. இளங்கோவன் உள்ளிட்ட மேலும் சிலரைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT