Published : 08 Nov 2013 01:18 PM
Last Updated : 08 Nov 2013 01:18 PM

இலங்கையிடம் மென்மையாக நடப்பது ஏன்?- முதல்வர் கேள்வி

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து பிடித்து செல்கின்றனர். இலங்கைச் சிறையில் 86 மீனவர்கள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இத்தகைய சூழலில் இலங்கையிடம் மத்திய அரசு ஏன் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்: பாக் ஜலசந்தியில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பிடித்தும் செல்கின்றனர்.

இலங்கை கடற்படையினரை கேட்பதற்கும், கண்டிப்பதற்கும் ஆளில்லை. மத்திய அரசு, தொடர்ந்து மென்மையான போக்கை கடைபிடிப்பது இலங்கை கடற்படையினருக்கு தைரியத்தை அளிக்கிறது. மத்திய அரசின் மவுனத்தால் இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு தொடர்கிறது

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 86 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளையும் மீட்க வேண்டும்.

இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x