Published : 06 Jan 2017 08:10 AM
Last Updated : 06 Jan 2017 08:10 AM
சென்னை கோட்ட ரயில்வே போலீஸ் எஸ்.பி. விஜயக்குமார் கூறியதாவது:
ரயில் பயணம் மற்றும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் பயணிகளிடம் செல்போனை திருடிச் செல்கின்றனர். கடந்த ஆண்டில் மொத்தம் 1,569 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. இவற்றில் 631 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பயணிகளின் பொருட்கள் திருட்டுபோவதை எவ்வாறு தடுக் கலாம் என்பதை விளக்கும் வகை யில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் ரயில்கள் மற்றும் நடைமேடைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கூட்டம் அதிகமாக இருக்கும்போது செல்போன் மீது முழு கவனம் இருக்க வேண்டும். பொருட்கள் திருட்டு மற்றும் பாதுகாப்பு தொடர் பாக உடனடியாக 1512 எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT