Published : 17 Aug 2016 09:12 AM
Last Updated : 17 Aug 2016 09:12 AM

ரித்தீஷ் மீதான புகார்: மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

ரூ. 3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்பி ஜே.கே.ரி்த்தீஷ் மீது கூறப்பட்டுள்ள புகார் குறித்து மீண்டும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்ற சுப்ரமணியன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் இரும்பு தொழிற்சாலை நடத்தி அதன் மூலம் அதி்க லாபம் பெறலாம் எனக்கூறி முன்னாள் எம்பியான ஜே.கே.ரி்த்தீஷ் என்னிடம் கடந்த 2014-ல் ரூ. 3 கோடி பெற்றார். ஆனால் கூறியபடி தொழிற்சாலை அமைக்காமல் என்னை மோசடி செய்தார். இதுதொடர்பாக போலீஸி்ல் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரித்தீஷ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த புகார் ஏற்கெனவே கடந்த 12.11.15-ல் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்க ப் பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரர் ஒரு வெளிநாடுவாழ் இந்திய பிரஜை என்பதால், ஜே.கே.ரி்த்தீஷ் மீதான புகார் குறித்து புதிதாக மீண்டும் விசாரணை நடத்த வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x