Published : 05 Jun 2016 10:50 AM
Last Updated : 05 Jun 2016 10:50 AM

காவிரியில் 7 கற்சிலைகள் மீட்பு

திருச்சி ஒட்டக்குடி கீழமுல்லைக் குடி பகுதியில் காவிரி ஆற்றில் சிலை கள் கிடப்பதாக திருவெறும்பூர் போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து 2 அம்மன், 2 நந்தி, 1 மன்மதன், 1 சிவலிங்கம், இன்னொரு சுவாமி சிலை என மொத்தம் 7 கற்சிலைகளை காவிரி யில் இருந்து போலீஸார் மீட்டனர்.

இந்தச் சிலைகளை திருடி வந்து இங்கு வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளதாக வரு வாய்த் துறை அதிகாரிகள் தெரி வித்தனர். விஏஓ குமாரவேலுவின் புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x