Published : 26 Jun 2016 01:25 PM
Last Updated : 26 Jun 2016 01:25 PM

தமிழகத்தில் கூலிப்படைக் கலாச்சாரம்: அரசு மீது திருமாவளவன் கடும் தாக்கு

கூலிப்படை கலாச்சாரம் தமிழகத் தில் தலைவிரித்து ஆடுகிறது. தமிழக அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் பட்டப் பகலில் படுகொலைகள் நடைபெறுகின்றன. காவல் துறையின் முன்னிலையிலும் நடைபெறு கின்றன. அண்மையில் சென்னை யில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வர்கள் கொலை செய்யப்பட்டுள் ளனர்.

தனிச்சட்டம் தேவை

கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. நீதிமன்றத்தில் சரண் அடைபவர்களை மட்டும் குற்றவாளிகளாக கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். அவர் களுக்குப் பின்னால் உள்ள கூலிப்படையினரை விட்டுவிடுகின் றனர். கூலிப்படையை ஒழிக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இப்பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர் நீதிமன்றம் கொண்டு வந்துள்ள வழக்கறிஞர்களுக்கான புதிய சட்ட விதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வரை பாராட்டுவதைத் தவிர வேறு எதையும் பேச முடியாது. இப்படியொரு சட்டப்பேரவை நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

உள்ளாட்சித் தேர்தல் நேர்மை யாக நடைபெற வாய்ப்பில்லை. மாநகராட்சிகளின் மேயரை, மக்களே நேரடியாக தேர்வு செய்யும் தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தை கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சி களும் இணைந்து வரும் உள்ளாட் சித் தேர்தலை சந்திப்போம். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x