Published : 28 Jan 2017 08:59 AM
Last Updated : 28 Jan 2017 08:59 AM

திருப்பூரில் பாஜக பிரமுகர் கொலை

திருப்பூரில் பாஜக பிரமுகர் நேற்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது:

திருப்பூர் முத்தணம்பாளையம் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் எஸ்.பி.மாரிமுத்து(53). திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர். நேற்று காலை இவர், தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் பால் கறக்கச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால், அவரது குடும்பத் தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் சென்று பார்த்தபோது கைகள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் துணி வைத்து திணிக் கப்பட்டும் மாட்டுத் தொழுவத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கி யுள்ளார். அருகில் பிரதமர் மோடி யின் புகைப்படம் மற்றும் இந்து முன்னணி கொடியும், செருப்பு மாலையும் கிடந்துள்ளது.

தனிப்படை

சம்பவ இடத்துக்கு போலீ ஸார் விரைந்து சென்று சடலத் தைக் கைப்பற்றி பிரேதப் பரி சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ஊரக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை யாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் கூறினர்.

கடையடைப்பு

இத்தகவலை அறிந்த பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்கு திரண்டனர். கொலைச் சம்பவத்தை கண்டித்தும், கொலை யாளிகளைப் பிடிக்க போலீஸார் துரித நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் திருப்பூர், தாராபுரம் சாலையில் உள்ள கடைகளை அடைக்க வற்புறுத்தினர். அத னைத் தொடர்ந்து, வியாபாரிகளும் கடைகளை அடைத்தனர்.

இக்கொலைச் சம்பவத்தால் திருப்பூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x