Published : 17 May 2017 11:23 AM
Last Updated : 17 May 2017 11:23 AM

பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.

சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் பிரபல தனி யார் நிறுவனம் ஈடுபட்டு வரு கிறது. இந்த நிறுவனம் உள்நாட் டில் மட்டுமல்லாமல் வெளிநாடு களுக்கும் எண்ணெய் வகைகளை யும், இதர தயாரிப்புகளையும் ஏற்று மதி செய்து வருகிறது. இந்த நிறு வனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வருமான வரி புலனாய்வு அதிகாரி களுக்கு புகார்கள் சென்றன.

இதுகுறித்து உரிய நட வடிக்கை எடுக்க வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் நேற்று காலை 7 மணிக்கு சென்னை ராயப்பேட்டை மற்றும் மயிலாப்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். சோதனை நடந்த அலுவலகம் உட்புறமாக பூட்டப்பட்டது. உள்ளே செல்லவோ, உள்ளே இருந்து யாரும் வெளியேறவோ அதிகாரிகள் யாரையும் அனு மதிக்கவில்லை. செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப் பட்டது.

தொடர்ந்து அலுவலகத்தின் வரவு, செலவு கணக்குகளையும் உற்பத்தி, இருப்பு, விற்பனை போன்ற விவரங்களையும் ஆய்வு செய்தனர்.

சுத்திகரிப்பு தொழிற்சாலை

ராயப்பேட்டை அலுவலகத்தில் சோதனை நடந்த அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களிலும், டீலர்களின் அலுவலகம், வீடுகளி லும், சென்னை அருகே வேங்கை வாசலில் உள்ள அதன் சுத்தி கரிப்பு தொழிற்சாலையிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப் பட்டன.

இது தவிர புதுச்சேரி, மும்பை, பெங்களூரு, காக்கி நாடா ஆகிய வெளி மாநில நகரங்களில் உள்ள அந்நிறுவன கட்டிடங்களிலும் வருமான வரி புலனாய்வு அதி காரிகள் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறும் போது, “சென்னையில் 38 இடங்களிலும், தமிழகம் முழுவதும் 48 இடங்களிலும், இந்தியா முழு வதும் 54 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஆவணங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய் துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தூத்துக்குடி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவன அலுவலகங் களிலும் சோதனை நடத்தப்பட்டுள் ளது. ஈரோட்டில் உள்ள எண்ணெய் நிறுவனத்தின் மொத்த விற்பனையாளரின் அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனை நடைபெற்ற இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x