

யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக அடைக்கப்பட்டிருக் கும் காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று திடீர் உண்ணாவிரதம் இருந்தனர்.
காரைக்கால் அருகே உள்ள டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, முகமதுகான், ரகுமான்கான் ஆகியோர் கடந்த மாதம் 9-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 4 பேரையும் விசைப்படகுடன் சிறைபிடித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த 4 மீனவர்களையும், 113 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் வேலைநிறுத் தப் போராட்டமும், கடலில் இறங்கி ஆர்ப்பாட்டமும் நடத்தி னர்.
இந்நிலையில், கடந்த 40 நாட் களாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி 4 மீனவர்களும் நேற்று திடீர் உண் ணாவிரதம் மேற்கொண்டனர்.