Published : 26 Jun 2016 12:55 PM
Last Updated : 26 Jun 2016 12:55 PM
ஓசூர் தலைமைக் காவலர் முனுசாமி கொலையில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என போலீஸில் சரணடைந்த முஜ்ஜாமில், விக்னேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஓசூர் தலைமைக் காவலர் மூர்த்தி கொலை தொடர்பாக தேடப் பட்டு வந்த முஜ்ஜாமில், விக்னேஷ் ஆகியோர் நேற்று ஓசூர் போலீஸில் சரணடைந்தனர். அவர்கள், தமிழக டிஜிபி, கோவை மேற்கு மண்டல ஐஜி, சேலம் சரக டிஐஜி மற்றும் நீதிபதி உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 15-ம் தேதி மூர்த்தியும், அமராவும் எங்களை சந்தித்து பணம் தருவதாக கூறி ஓசூர் பாரதிதாசன் நகருக்கு அழைத்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற நாங்கள், மூர்த்தி கூறிய இடத்தில் காத்தி ருந்தோம். அப்போது, மாடியில் மூர்த்தியையும், அமராவையும் 3 பேர் சேர்ந்து தாக்கினர். அப்போது, மூர்த்தி தான் கையில் வைத்திருந்த கத்தியால் அவர்களை தாக்கினார். இதனை தடுக்க சென்ற அமராவுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நாங்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டோம். அதனைத் தொடர்ந்து செய்தித்தாள் களில் படித்த போதுதான், நகை பறிப்பு வழக்கில் மூர்த்தி கைது செய்யப்பட்டது தெரிந்தது.
மேலும், மறுநாள் மூர்த்தி உடல்நலக் குறைவால் இறந்ததாகக் கூறப்பட் டது. ஆனால் மூர்த்தியை அடித்து கொலை செய்து விட்டனர். எங்களை இவ்வழக்கில் தேடி வருவதாக அறிந்தோம். இதனால், நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சரண் அடையச் சென்றோம்.
ஆனால், எங்களால் சரண் அடைய முடியவில்லை. எங்கள் குடும்பத் தினரை போலீஸார் துன்புறுத்திய தால்தான், போலீஸில் சரண் அடைந்துள்ளோம். நாங்களும் மூர்த்தியை போல் மர்மமான முறையில் மரணம் அடைந்தால் அதற்கு போலீஸார்தான் முழு காரணம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT