Published : 06 Apr 2017 06:41 PM
Last Updated : 06 Apr 2017 06:41 PM
காஸா கிரண்டி தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அனிருதன் (36) என்பவரை சென்னை நகர போலீஸ் துறையின் மத்திய குற்றவியல் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பெருங்குடியில் வில்லாக்கள் கட்டுவது தொடர்பான ஆவணங்களில் முறைகேடு செய்ததாக கே.ஆர்.அனிருதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கேயெஸ் எஸ்டேட் நிறுவனத்தின் குலசேகரன் என்பவர் தனது 1.33 ஏக்கர்கள் நிலத்தை 50:50 கூட்டுறவில் வில்லாக்கள் கட்ட காஸா கிரண்டி நிறுவனத்துடன் 2010-ல் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து காஸா கிரண்டி இணை நிறுவனர்களான அனிருதன், அருண்குமார் ஆகியோருக்கு கட்டிடத் திட்ட அனுமதிகளைப் பெற பவர் ஆஃப் அட்டார்னியும் அளித்தார்.
ஆனால் இந்த வில்லாக்கள் கட்டுவதற்கு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்திடம் அனுமதிகள் பெறுவதற்குப் பதிலாக, காஸா கிரண்டி நிறுவனம் ஆவணங்களை முறைகேடு செய்து பிளாட்டை 5 பகுதிகளாக பிரித்துக் காட்டியுள்ளது. பிறகு ஆவணங்களை டவுன் பஞ்சாயத்தாரிடம் சமர்ப்பித்து முறைகேடு செய்யப்பட்ட ஆவணங்களின் வழியாக திட்ட அனுமதியையும் வாங்கியுள்ளது.
இந்நிலையில் குலசேகரன் தனது பகுதியை விற்க முடிவு செய்தார். அவர்தான் 2015-ம் ஆண்டு காஸா கிரண்டி ரூ.20 கோடி வரையில் தன்னை ஏமாற்றியதாக மத்திய குற்றப்பிரிவிடம் புகார் அளித்தார். முதல் தகவல் அறிக்கையில் அனிருதன், அருண்குமார் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவானது.
இதனையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் புதனன்று காஸா கிரண்டி நிர்வாக இயக்குநர் அனிருதனைக் கைது செய்தது. இவரை ஆலந்தூர் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக இன்னொரு குற்றம்சாட்டப்பட்டவரையும் தேடி வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT