நாகை மீனவப் பிரதிநிதிகள் முதல்வருடன் இன்று சந்திப்பு

நாகை மீனவப் பிரதிநிதிகள் முதல்வருடன் இன்று சந்திப்பு
Updated on
1 min read

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதல்வர் ஜெயலலிதாவை நாகை மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் இன்று சந்திக்க உள்ளனர்.

உண்ணாவிரதம்:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி (டிசம்பர் 21-ஆம் தேதி) சனிக்கிழமை நாகப்பட்டினத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். அவர்களது போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

கடந்த டிச. 11-ல் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 110 மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 30 பேர் என 140 பேரை இலங்கை கடற்படையினர் ஒரே நேரத்தில் சிறைப்பிடித்தனர். இதனால் டிசம்பர் 12 முதல் நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடையடைப்புப் போராட்டம்:

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் நாகை மீன்வர்களுக்கு அம்மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் வணிகர் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனால், நாகையில் இன்று காலை முதல் மாலை வரை கடையடைப்புப் போராட்டமும் நடைபெறுகிறது. அங்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in