Published : 16 Mar 2017 08:46 AM
Last Updated : 16 Mar 2017 08:46 AM
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வும், ஓ.பன்னீர்செல்வம் ஆதர வாளருமான ஜே.சி.டி. பிரபாகரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 2011-16 ஆண்டு களில் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஜே.சி.டி.பிரபாகரன். 2016-ம் ஆண்டு தேர்தலில் கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந் தார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். சதுரங்க விளையாட்டு குழும தலைவராகவும், வழக்கறிஞ ராகவும் இருந்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 4-வது தெருவில் 3 தளங்களை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று மாலை இவரது வீட்டுக்கு 2 வாகனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 10 பேர் வந்தனர். ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டின் 3 தளங்களிலும் சோதனை நடத்தினர். "வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்த வந்திருக்கிறோம். சோதனை குறித்து இப்போது தகவல் எதுவும் தெரிவிக்க முடியாது" என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லிலும்..
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அலு வலகம், திண்டுக்கல்லில் உள்ள வீடு மற்றும் சில இடங்களிலும் சோதனை நடந்ததாக கூறப் படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஓ.பன் னீர்செல்வம் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது முக் கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT