Last Updated : 29 Jan, 2014 09:00 AM

 

Published : 29 Jan 2014 09:00 AM
Last Updated : 29 Jan 2014 09:00 AM

பிப்ரவரி 21-ல் தமிழக பட்ஜெட்?

தமிழக பட்ஜெட் பிப்ரவரி 21-ம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

வரும் மே மாதத்துக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கை வெளியாகும். அதன் பிறகு, புதிய அறிவிப்புகளை அரசுகள் வெளியிடமுடியாது. இதை கருத்தில் கொண்டு, வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 21-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இருக்கலாம் என்று தெரிகிறது.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் வியாழக்கிழமையன்று கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இதுகுறித்து ஆலோசிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 2.45 மணி வரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x