Published : 30 Jun 2016 08:15 AM
Last Updated : 30 Jun 2016 08:15 AM

பழ.நெடுமாறன் மீதான அவதூறு வழக்கு: கருணாநிதி நேரில் ஆஜராக மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

பழ.நெடுமாறனுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி நேரில் ஆஜராக மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி குறித்து, உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் 2011 தேர்தல் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதையடுத்து கருணாநிதி சார்பில் பழ.நெடுமாறன் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, “இந்த வழக்கை கருணாநிதி சார்பில் தொடுத்த அரசு வழக்கறிஞர் ஷாஜகான் இப்போது பதவியில் இல்லை. எனவே இந்த வழக்கை கருணாநிதி சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் தொடர்ந்து நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

எனவே இந்த வழக்கில் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்பதால் அடுத்த விசாரணையின்போது கருணாநிதி நேரில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x