Published : 29 Mar 2017 10:53 AM
Last Updated : 29 Mar 2017 10:53 AM
கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.கலியபெருமாள் கூறியதாவது:
மூன்றாம் நபர் வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, வட்டாரப் போக்குவரத் துக் கழக அலுவலகங்களில் உரிமம், ஆவண புதுப்பிப்பு ஆகியவற்றுக்கு கட்டண உயர்வு, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்பது, டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (மார்ச் 30) முதல் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்ட லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் கோவையில் 4000 லாரிகள் இயங்காது. நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்படும். பால், தண்ணீர், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சேவை தடைபடாது.
இந்த வேலைநிறுத்தத்துக்கு தொழில்துறையினர், வியாபாரிகள் உட்பட அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். வேலைநிறுத்தத்தின் போது வட மாநில லாரிகள் அனுமதிக்கப்படாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT